மேடை ஆகச்சிறந்த ஓர் புதல்வனை இழந்துவிட்டது
மேடையில் இன்று இருள். முடிவுறா நாடகத்தின் முடிந்துபோன முந்தைய காட்சியில் பிரமாதமாக நடித்துப்பேர் வாங்கியவன் இடைவேளைக்கு வெளியேறினான். வெகு நேரமாகியும் காணவில்லை. உற்றார் உறவினர் அவன் தேவையை உணர்ந்து தேடிய பகுதிகளிலெல்லாம் அவன் நடித்துச் சென்ற காட்சிகளின் மேன்மை பாராட்டப்படுகிறது. அவன் எப்போவோ வாசித்த வார்த்தைகளின் அர்த்தங்கள் இப்போ புரியத் தொடங்குகிறது. வெகு தொலைவில் ஒரு புதரில் யாருமற்ற வனத்தில் சக்கரஉராய்வுகளைப் புதிதாக உணரும் மரஞ்செடிகளுக்குள் எதுவோடோ உடல் மறந்து கதைபேசும் மொழிபழகத் தொடங்கிவிட்டான். அவனை நடிக்க அழைப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவனது மேடைக்கு ஒளியின் தேவை இல்லை. எங்கும் எப்போதும் பிரகாசமாய், அவன் வாழ்ந்த காட்சிகளின் செரிமானங்கள் அவன் நகர்வின் அதிர்வாய் நம்முள் அன்பாய், அறிவாய், அறமாய்...... அருளாய்! கடவுளே உன் அரங்கில் அவனைப் பாதுகாப்பாக வைத்துக்கொள், வேலாயுதம் (நாடகத்துறை, புதுவை பல்கலைக்கழகம், புதுவை) மிகமிக மென் இதயம் கொண்டவன். அவன் கண்ட களம், மேடை, உறவு, பகிர்வு, பதிவு அனைத்திலிருந்தும் விடுபட்டபோதும் நினைவுகளைச் சுமந்தலையும் அவனோடு பழகிய அனைத்து உறவும் நட்பும்.
